உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், எலுமிச்சம்பழம்

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், எலுமிச்சம்பழம்

காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. இந்த பெட்டியில் பக்தர்களின் கனவில் சென்று, சுப்ரமணியசுவாமி கூறும் பொருள் வைத்து பூஜை செய்யப்படுவது, நுாற்றாண்டு வழக்கமாக உள்ளது. அடுத்த பொருள் வரும் வரை, முந்தைய பொருள் பெட்டியில் இடம் பெறும். பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள், சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அல்லது நடப்பதை முன்கூட்டியே கணிப்பதாக அமையும் என்பதும், பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு அக்., மாதம், 4ம் தேதிமுதல், கடல் நீர் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று முதல் மஞ்சள் பிள்ளையார், அருகம்புல், வெற்றிலை பாக்கு, எலுமிச்சம்பழம் வைக்க உத்தரவாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம், கொங்கூர், உண்டார்பட்டியை சேர்ந்த பக்தர் ராம்குமார், 30, கனவில், இதற்கான உத்தரவு கிடைத்துள்ளது. இதுகுறித்து சிவாச்சாரியார்கள் கூறுகையில், ‘ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இந்த பொருட்கள் அனைத்தும் மங்களகரமானவை. இதனால் நாட்டில் ஆன்மிக பற்று  அதிகரிக்கும்’ என்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !