மாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா
ADDED :1194 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பெருமாள்மடை முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து விழாவை முன்னிட்டு இரவில் பெண்களின் கும்மியாட்டமும், இளைஞர்களின் ஒயிலாட்டமும், நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற கரக ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்பு மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கிராமத்தினால் செய்திருந்தனர்.