உலகமக்கள் நன்மை வேண்டி கூட்டு பிரார்த்தனை
ADDED :1267 days ago
சாத்துார்: சாத்துார் மிளகாய் வத்தல் வியாபாரிகள் திருமண மண்டபத்தில் உலகமக்கள் நன்மை பெற வேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமை வகித்து கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்டார். சாத்துார் மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு நெல்லிக்கனி பிரசாதமாக வழங்கப்பட்டது. குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிட்டி இந்தியா டிரஸ்ட் சார்பில் சாத்துார் நாமத்வார் சங்க நிர்வாகிகள்ஏற்பாடுகளை செய்திருந்தனர்.