காளியம்மன் கோயிலில் பொங்கல் விழா : அக்னிசட்டி நேர்த்திக்கடன்
ADDED :1265 days ago
விருதுநகர் : விருதுநகர் காந்திபுரம் தெருவில் காளியம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. செப். 9ல் சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் சிறப்பு அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது. மாலை உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று அம்மன் அக்னிசட்டி ஏந்திய அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோயில் வளாகத்தில் ஏராளாமான பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.