உலக நன்மைக்காக ராமேஸ்வரம் கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை
ADDED :1340 days ago
ராமேஸ்வரம்: உலக நன்மைக்காக விவேகானந்த கேந்திரம் சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை நடந்தது.
உலக நன்மைக்காகவும், இந்திய பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டி ராமநாதபுரம் விவேகானந்த கேந்திரத்தின் கிராம முன்னேற்ற டிரஸ்ட் சார்பில் நேற்று மாலை ராமேஸ்வரம் திருக்கோயில் 3ம் பிரகாரத்தில் சிறப்பு பூஜை நடந்தது. இதனைதொடர்ந்து பெண்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து 2008 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடந்தது. இதில் கிராம முன்னேற்ற ட்ரஸ்ட் தலைவர் ஐயப்பன், பசுமை ராமேஸ்வரம் அமைப்பு நிர்வாகி ஸ்ரீதர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.