உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கோவிலுக்கு அம்பானி நன்கொடை

குருவாயூர் கோவிலுக்கு அம்பானி நன்கொடை

திருச்சூர் : கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவில் அன்னதானத்துக்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, 1.51 கோடி ரூபாய் நன்கொடையாக  அளித்துஉள்ளார். கேரளாவில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.இளைய மகன்  ஆனந்த் அம்பானியின் வருங்கால மனைவியுடன் வந்திருந்த அவர், கோவில் அன்னதான நிதியாக 1.51 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்தார். இதன் பின், கோவில் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில்,  கோவில் வளாகத்தில் 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள மருத்துவமனைக்கு, அம்பானியிடம் உதவி கேட்கப்பட்டது. அதை பரிசீலிப்பதாக அவர் கூறினார் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !