உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்சணகாசி கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தட்சணகாசி கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தர்மபுரி: புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியான நேற்று, தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை தட்சணகாசி கால பைரவர் கோவிலில், பல்வேறு யாகங்கள், சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா மாநில பக்தர்களும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  சாம்பல் பூசணியில் தீபமேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர்.


முன்னதாக காலை, 6:00 மணிக்கு தட்சணகாசி காலபைரவருக்கு, அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம், தனகார்சண குபேரயாகம், அதிருந்ரயாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகை அபிஷேகம், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. பின், ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் யாகபூஜை நடந்தது. இதேபோல் தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவர் சன்னதியில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !