மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா
ADDED :1099 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வரவணி முத்து மாரியம்மன் கோயில், முளைப்பாரி உற்சவ விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த எட்டு நாட்களாக வீடுகளில், வளர்க்கப்பட்டு வந்த முளைப்பாரிகளை, பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, தினமும் இரவில் பெண்களின் கும்மியாட்டமும், இளைஞர்களின் ஒயிலாட்டமும், நடைபெற்று வந்தன. விழாவின் கடைசி நாளில், கோயிலில் இருந்து முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, குளக்கரையில் கரைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.