உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி சனி : போடி பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி சனி : போடி பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

போடி: புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு மக்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்கும் வகையில் கருப்பு நாமம் அணிந்தபடி போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஸ்ரீதேவி, பூதவியுடன், சீனிவாசப்பெருமாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் அருளாசி பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சியர் செய்திருந்தார், அன்னதானம் வழங்கப்பட்டது.

* போடி மேலச்சொக்கநாதபுரத்தில் தொட்டராயர் ஒன்னம்மாள் கோயில், சிலமலை சீனிவாசப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !