உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருமலை திருப்பதி பட்டு சாற்றல்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருமலை திருப்பதி பட்டு சாற்றல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பட்டு சாற்றும் வைபவம் நேற்றிரவு நடந்தது.

திருப்பதி புரட்டாசி பிரமோற்ஸவம் ஐந்தாம் நாளன்று ஏழுமலையான் சாற்றிக் கொள்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி களைந்த மாலை, கிளி, பரிவட்டம் கொண்டு செல்வது வழக்கம். இதற்கு எதிர் சீராக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து, ஆண்டாளுக்கு பட்டு கொடுத்து அனுப்புவார்கள். அதன்படி கடந்த செப்டம்பர் 29 அன்று திருப்பதி ஏழுமலையானுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து சீர் கொண்டு செல்லப்பட்டது. இதற்கு எதிர்சீராக ஏழுமலையான் கோயிலில் இருந்து பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆண்டாளுக்கு கொண்டுவரப்பட்டது. இதனை ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சாற்றும் வைபவம் நேற்றிரவு 7:25 மணிக்கு ஆண்டாள் கோயிலில் நடந்தது. ஸ்தானிகம் ரமேஷ் வீட்டிலிருந்து கோயில் மரியாதையுடன் பட்டு, மங்கல பொருட்கள் கொண்டு வரப்பட்டது. வெள்ளிக்கிழமைகுறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு பட்டு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகளை ராஜா பட்டர் செய்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, வேதபிரான் சுதர்சன், அரையர் பாலமுகுந்தன், ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ், மணியம் கோபி மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !