வாரணாசியின் பெயர்க் காரணம் என்ன?
ADDED :1405 days ago
கங்கை நதியில் வருணை என்ற நதியும், அஸி என்ற நதியும் இணையும் இடம்தான் காசி. வருணையும், அஸியும் இணைவதால் இந்நகரம் வாரணாசி என அழைக்கப்படுகிறது. இடைக்காலத்தில் காசி என அழைக்கப்பட்ட இந்த நகரம் 1956ம் ஆண்டுக்குப் பிறகு வாரணாசி என்றே அழைக்கப் படுகிறது.