பழநி கோயிலில் உற்ஸவருக்கு ஜடிபந்தனம் நடந்தது
ADDED :1142 days ago
பழநி: பழநி மலைக்கோயில் உற்ஸவரான சின்ன குமார சுவாமிக்கு கலாகர்ஷணம், ஜடிபந்தனம், நடைபெற்றது.
பழநி மலைகோயில் உற்ஸவரான சின்ன குமாரசுவாமி தினமும் தங்கரத புறப்பாட்டில் எழுந்தருள்வார். உற்ஸவர் சின்னகுமாரசுவாமிக்கு (அக்.,19), நேற்று முன்தினம் இரவு, சிறப்பு பூஜைகள் செய்து கலாகர்ஷணம், ஜடிபந்தனம் நடைபெற்றது. (அக்.,20) நேற்று காலை சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. உற்ஸவர் சின்ன குமாரசுவாமிக்கு யாகத்தில் வைக்கப்பட்ட கலச நீரில் கலசாபிஷேகம் நடந்தது. அதன்பின் மஹாபிஷேகம், மஹாதீபாதாரணை பின் சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டது. உச்சிகால பூஜைக்கு பின் உற்ஸவர் சின்னகுமாரசுவாமிக்கு உபய அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் கோயில் இணை கமிஷனர் நடராஜன், உட்பட பலர் பங்கேற்றனர்.