உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை பெய்ய வேண்டி அமராவதி ஆற்றில் தீப ஆரத்தி

மழை பெய்ய வேண்டி அமராவதி ஆற்றில் தீப ஆரத்தி

உடுமலை: அகில பாரத சன்யாசிகள் சங்கம் சார்பில், உடுமலை அருகே அமராவதி ஆற்றில் மழை வேண்டி, தீப ஆரத்தி திருவிழா நேற்றுமுன்தினம் துவங்கியது.

உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை நீர், திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் வழியோர கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. நடப்பாண்டு, பருவ மழைகள் பொய்த்து, அணை நீர்மட்டம் சரிந்துள்ளதோடு, ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது.

இந்நிலையில், அகில பாரத சன்யாசிகள் சங்கம் மற்றும் ஸ்ரீதாண்டேஸ்வரர் தெய்வீக திருப்பணி மன்றம், காசிவிஸ்வநாதர் அறப்பணி மன்றம், கோட்டை மாரியம்மன் வழிபாட்டு குழு, கரிவரதராஜ பெருமாள் கோவில் திருப்பணிக்குழு மற்றும் பொதுமக்கள் சார்பில், மழை பெய்ய வேண்டி, மடத்துக்குளம் கொழுமத்தில், அமராவதி ஆற்றில், தீப ஆரத்தி விழா நேற்றுமுன்தினம் துவங்கியது.

மாலை, 4:00 மணிக்கு, முற்றோதல், வருண ஜெபம், அமராவதி அன்னைக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீப ஆரத்தி நிகழ்ச்சிகள் நடந்தன.

ஆர்ஷவித்யா பீடம் பூஜ்ய ஸ்ரீததேவாநந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்தார். மதுரை ஆதீனம் ஸ்ரீமத் விஷ்வ லிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் சன்யாசிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். அமராவதி அன்னையை வணங்கியும், மழை வேண்டியும் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !