விழுப்புரம் பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய கால பூஜை
ADDED :6 hours ago
விழுப்புரம்: விஷ்ணுபதி புண்ணிய கால பூஜையை முன்னிட்டு, பெருமாள் கோவிலில் பக்தர்கள் 27 முறை பிரகார வலம் வந்தனர்.
விழுப்புரம் வைகுண்டவாசல் பெருமாள் கோவிலில், ஆடி மாத கடைசி நாளான இன்று விஷ்ணுபதி புண்ணிய கால பூஜை நடந்தது. அதனையொட்டி, காலை 4:00 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. திரளான ஏராளமான கோவில் கொடி மரம் மற்றும் வளாகத்தை 27 முறை பிரகார வலம் சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.