நத்தத்தில் சனி பிரதோஷ விழா
ADDED :1049 days ago
நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் சனி பிரதோஷ விழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள நந்தி சிலைக்கு பால், இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி உள்ளிட்ட மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார். தொடர்ந்து மூலவர் கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.