கூடல் சுந்தரவேலவர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது
ADDED :1240 days ago
கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் 25வது ஆண்டு கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. சுந்தரவேலருக்கு சிறப்பு பால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மகளிர் குழுவினரின் தெய்வீக கூட்டு வழிபாடு பிரார்தனை மேற்கொள்ளப்பட்டது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவைக்கினர். மாவு, பழச்சாறு, பால் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.