உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அல்லாளபுரம் கோவில் மண்டல பூஜை நிறைவு

அல்லாளபுரம் கோவில் மண்டல பூஜை நிறைவு

பல்லடம்:அல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி மற்றும் கரிய காளியம்மன் கோவில்களில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது.

பல்லடம் அருகேயுள்ள கரைப்புதுார் ஊராட்சி, அல்லாளபுரம் கிராமத்தில், பழமை வாய்ந்த உண்ணாமலை அம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி மற்றும் கரிய காளியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில், திருப்பணிகள் நடந்து, கடந்த மாதம், 8ல் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, 48 நாள் மண்டல பூஜை தினசரி நடந்து வந்தது. நேற்று மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதற்காக, நேற்று முன்தினம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், 108 சங்கு பூஜை மற்றும் முதல் கால யாக பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம், இரண்டாம் கால யாக பூஜை, திரவியாஹூதி மற்றும் நேற்று காலை, உண்ணாமலை அம்மன் உலகேஸ்வர சுவாமி மற்றும் கரிய காளியம்மனுக்கு சங்காபிஷேகம், திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலை அம்மன் உலகேஸ்வரர் மற்றும் கரிய காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கோவில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !