உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

சென்னியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

அன்னூர்: தாத்தம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று துவங்குகிறது.

வடவள்ளி ஊராட்சி, தாத்தம்பாளையத்தில் பழமையான பிரசித்தி பெற்ற சென்னியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக கோபுரம், விநாயகர் மேடை, வீரபாகு தேவர் மேடை, முன் மண்டபம், சுற்றுச்சுவர் ஆகிய திருப்பணிகள் செய்யப்பட்டன . இதையடுத்து கும்பாபிஷேக விழா இன்று மதியம் திருவிளக்கு வழிபாடுடன் துவங்குகிறது. மாலையில், முதற்கால வேள்வி பூஜை நடக்கிறது. இரவு ஊஞ்சப்பாளையம் குழுவின் காவடி ஆட்டம் நடக்கிறது. வரும் பத்தாம் தேதி காலையில் பாவன அபிஷேகமும், மாலையில் பேரொளி வழிபாடும், இரவு தெய்வானை குறித்த சொற்பொழிவும், பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 11ம் தேதி காலை 7:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர். இரவு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !