உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீப விழா

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீப விழா

கோவில்பட்டி : கோவில்பட்டி செண்பகவல்லி_அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, நேற்று காலை 04:00 மணிக்கு நடைதிறப்பு திறக்கப்பட்டு, காலை 04:30 மணிக்கு திருவணந்தல் பூஜை நடைபெற்றது. காலை 05:30 மணிக்கு பரணிதீபம் ஏற்றுதல் நடைபெற்றது. இரவு 07:00 மணிக்கு மேல் மகா தீபம் (சொக்கப்பனை) ஏற்றுதல் நடைபெற்று பின்னர் ரிஷப வாகனத்தில்  கௌரி அம்பாள் சமேத சந்திரசேகர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !