சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED :1025 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர் சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. திருக்கோவிலூர், என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை வெண்ணை காப்பு அலங்காரத்தில் அர்ச்சனை, நாமசங்கீர்த்தனம், மகா தீபாராதனை நடந்தது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகளின் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு லட்டு உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.