கோதண்டராமசுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி
ADDED :1097 days ago
கோவை ராம்நகர் கோதண்டராமசுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேய சுவாமிக்கு வேதபாராயணத்துடன் திருவீதி உலா வந்தார்.
கோயம்புத்தூர் திருப்பாவை சங்கம்- ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தின் இணைந்து 64 ஆம் ஆண்டு மார்கழி மாத திருப்பாவை உபன்யாத்தை நடத்தி வருகின்றனர். இதில் ஸ்ரீ பெண்டரீகபுரம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமி ஸ்ரீ பறவாக்கோட்டை சின்னாண்டவன் ஸ்ரீ ஸ்ரீனிவாச கோபால மகாதேசிகன் அவர்கள் கலந்துகொண்டு உபன்யாசம் நிகழ்த்தினார். இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.