உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீதேவி பூமிதேவியுடன் சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்

ஸ்ரீதேவி பூமிதேவியுடன் சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்

போடி: போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது.

திருப்பதியில் காலை நடை திறப்பது முதல் இரவு நடை சாத்தும் வரை நடக்கும் திருக்கல்யாணம் பூஜைகளை போல போடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் ஒரு நாள் உற்சவ திருவிழா நேற்று நடந்தது. அதிகாலை விஸ்வரூப தரிசனம், கோபூஜை, திருப்பாவை மகா தீபாரதனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு மேல் துவங்கிய சிறப்பு பூஜை, அலங்காரம், ஊஞ்சல் சேவை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தன. பூஜைகளுக்கு பின்பு ஸ்ரீதேவி பூமிதேவியுடன் சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம், சீர்வரிசை, மணமகன் வரவேற்பு, பாலும் பழம் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பு பூஜைகளை கார்த்திக் பட்டாச்சாரியர் குழுவினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !