உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருவாதிரையை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

ஆதியும் அந்தமும் அருட்பெரும் ஜோதியான சிவபெருமானின் அவதாரத்தில் இன்றியமையாதது நடராஜர் திருக்கோலம். இதில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நன்னாளில் ஆருத்ரா தரிசன விழா சிவனடியார்களின் சிறப்புமிக்க விழாவாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று இரவு 7:00 மணிக்கு நடராஜர் சபையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாஆவன பூஜை, வேத மந்திரங்கள் முழங்க சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இன்று காலை நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்களின் நமச்சிவாயா கோஷம் முழங்க ஷோடசோபவுபச்சார தீபாராதனை, திருவம்பாவை பாடப்பட்டு சுவாமி வீதிஉலா நடந்தது. பகல் 11:40 மணிக்கு திருவூடல் வைபவம் இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !