அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்
ADDED :1269 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தங்க கொடிமரம் அருகே துருக்கி நாட்டைச் சேர்ந்த மிர்வி என்ற பெண் ஆனந்த நடனம் ஆடியதை, அவருடன் வந்த நபர்கள் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மூன்றாம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதி அருகே அரச மற்றும் வில்வம் இரண்டும் இணைந்தபடி உள்ள மரத்தில் இருக்கும் மரபல்லியை ஏராளமான பக்தர்கள் ஆச்சிரியத்துடன் கண்டு வணங்கிச் சென்றனர்.