வேணுகோபாலசுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :1270 days ago
கோவை : கோவை காந்தி பார்க் தெப்பக்குளம் வேணுகோபாலசுவாமி கோவிலில் வேணுகோபாலசுவாமி ருக்மணி, சத்யபாமாவுடன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கோவை காந்தி பார்க் தெப்பக்குளம் வேணுகோபாலசுவாமி கோவிலில் மார்கழி மாத ஆண்டாள் கல்யாண உற்சவத்தின் ஒரு பகுதியாக தை மாதத்தின் முதல் ஞாயிற்றுகிழமை அன்று ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வாசுதேவர்-ஆண் டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டனர்.