உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவம்

உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் நிறைவாக தேகளீச பெருமாள் கண்ணாடி அறையில் அருள்பாலித்தார்.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவ நிறைவு விழா நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார், தேகளீச பெருமாளுக்கு கண்ணாடி அறையில் விசேஷ திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு தாயார் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஒரே கேடயத்தில் எழுந்தருளி பக்தி உலா நடந்தது. இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார். 8:00 மணிக்கு கண்ணாடி அறையில் எழுந்தருளி திவ்யபிரபந்த துவக்கம், சேவை சாற்றுமறை, பெருமாள் தாயார் கண்ணாடி அறையில் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று காலை 9:00 மணிக்கு தாயார் பெருமாள் ஒரே கடையத்தில் புறப்பாடாகி ஆஸ்தானம் எழுந்தருளினர். ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் ஸ்வாமிகள் உத்தரவின் பேரில் தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் மேற்பார்வையில், விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்தது. இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !