உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

மயிலாடுதுறை லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் சித்தர்காடு ரயிலடி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்; ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை ரயிலடி அருகே சித்தர்காட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் 17-ஆம் ஆண்டு திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது. விழாவையொட்டி ரயிலடி சக்தி மாரியம்மன் கோயிலில் இருந்து ஏராளமான பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து கோயிலில் கோ பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து கோயில் பிரகாரத்தில் ஸ்ரீதேவி பூமாதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாள்  வசந்த மண்டபத்தில்  எழுந்தருள செய்யப்பட்டு, சிறப்பு ஹோமம், மாலை மாற்றுதல் உற்சவம், கன்னிகாதானம் செய்யப்பட்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் வளையல் மஞ்சள் கயிறு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !