காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை
ADDED :1006 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மதனப்பள்ளியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் நடக்கும் அன்னதானத் திட்டத்திற்காக ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக கோயில் அதிகாரிகளிடம் வழங்கினர். முன்னதாக இவர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகளை கோயில் சார்பில் செய்யப்பட்டது. கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சாமி படத்தையும் சாமி அம்மையார்களின் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர்.