இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED :966 days ago
மதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை, இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம்,
கண்காணிப்பாளர் கணபதி ராம் செய்திருந்தனர். இந்த வழிபாட்டு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.