மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் விழா
ADDED :1082 days ago
வெள்ளலூர்: வெள்ளலூர் அருகே இடையர்பாளையத்திலுள்ள மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் திருக்கல்யான உற்சவ விழா கடந்த, 31ல் சாமி சாட்டுதலுடன் துவங்கியது. 7ல் புண்ணியார்ச்சனை. காப்பு கட்டுதல், கம்பம் நடுதல் நடந்தன. 13 இரவு கொடியேற்றப்பட்டது. நேற்று காலை அழகுநாச்சியம்மன் கோவிலிலிருந்து சக்தி, தீர்த்த கரகங்கள் முன் செல்ல, அலங்கரிகப்பட்ட சிம்ம வாகனத்தில் அம்மன் பின்தொடர ஊர்வலம் கோவிலை சென்றடைந்தது. மதியம் அபிஷேக அலங்கார பூஜையும். அன்னதானமும் நடந்தன. மாலை மாவிளக்கு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மதியம் முதல் மஞ்சள் நீராடல், சாமி திருவீதி உலா, ஊஞ்சல் தாலாட்டு ஆகியவை நடக்கின்றன. நாளை இரவு மந்த பூஜையுடன் விழா நிறைவடைகிறது.