உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு

இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு

மதுரை : சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அரங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமான் பிரதோஷ நாயகர் நாயகி மூலவர் சிறப்பு அபிஷேகம் ஆராதனை தீபாராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர்  நாயகி திருக்கோயில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது நாள்18.02.2023 அதனைத் தொடர்ந்து மகா சிவராத்திரி முன்னிட்டு இரவு 10 மணிக்கு 1008 சங்காபிஷேகம் முதல் கால பூஜையும் இரவு 12 மணிக்கு இரண்டாம் கால பூஜை அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜை நான்கு மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !