உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சியில் திருக்கச்சி நம்பிகள் வருஷோத்ஸவம் துவக்கம்

காஞ்சியில் திருக்கச்சி நம்பிகள் வருஷோத்ஸவம் துவக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளின் அந்தரங்க பக்தராகவும், திருவாலவட்டம் எனப்படும் விசிறி வீசும் முதலான கைங்கர்யம் செய்வதாராகவும் விளங்கியவர் திருக்கச்சி நம்பிகள் என, வரலாறு கூறுகிறது.

திருக்கச்சி நம்பிகளுக்கு, காஞ்சிபுரம் அஷ்டபுஜபெருமாள் கோவிலில் இருந்து, வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழியில், தனி கோவில் உள்ளது. இதனால், இத்தெருவிற்கு திருக்கச்சி நம்பி தெரு என, அழைக்கப்படுகிறது. தற்போது, டி.கே.நம்பி தெரு என அழைக்கப்படுகிறது. திருக்கச்சி நம்பிகளுக்கு, ஆண்டுதோறும் மாசி மாதம் மாமுல்படி எனப்படும், வருஷோத்ஸவம் விமரிசையயாக நடக்கிறது. அதன்படி, நடப்பு ஆண்டு உற்சவம் நேற்று முன்தினம் விமரிசையாக துவங்கியது. வருஷோத்ஸவத்தையொட்டி, காலையில், சிறப்பு அலங்காரம் மற்றும் மஹாதீபாராதனையும், மாலை சிறப்பு மலர் அலங்காரத்தில் திருக்கச்சி நம்பிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வரும், 28ல் மாலை, 6:00 மணிக்கு, ஆடிசன்பேட்டை செட்டித்தெருவில், திருக்கச்சிநம்பிகள் வீதியுலா மற்றும் மண்டகப்படி உற்சவம் நடக்கிறது. மார்ச் 1ல், மிருகசீரிஷ நட்சத்திர சாற்றுமறையும், மாலை, காஞ்சிபுரம் வரதராஜபெருமாள், திருக்கச்சிநம்பிகள் சன்னிதிக்கு எழுந்தருளி சேவை சாற்றுமறை உற்சவம் விமரிசையாக நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்கச்சிநம்பிகள் தேவஸ்தான தர்மகர்த்தாக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !