உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசி திருவிழா: பொற்கலை அம்பாளுடன் வல்லடிகாரருக்கு திருக்கல்யாணம்

மாசி திருவிழா: பொற்கலை அம்பாளுடன் வல்லடிகாரருக்கு திருக்கல்யாணம்

மேலுார்: மேலுார், அம்பலகாரன்பட்டியில் உள்ள வல்லடிகாரர் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு பூரணி மற்றும் பொற்கலை அம்பாளுடன் வல்லடிகாரருக்கு நேற்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று மதியம் (மார்ச் 3) கோயிலில் உச்சி கிடா வெட்டி பொங்கல் வைத்ததும் வெள்ளலுார், உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி உள்ளிட்ட 60 கிராமங்களில் கிடா வெட்டி பொங்கல் வைக்கப்படும். அன்று இரவு வெள்ளிரதத்தில் சுவாமி அம்பாளுடன் கோயிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும், மார்ச் 4 தேரோட்டமும், மார்ச் 5 ல் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !