உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் தெப்ப உத்ஸவம்: மார்ச் 6ல் வெண்ணெய்த்தாழி சேவை

திருக்கோஷ்டியூர் தெப்ப உத்ஸவம்: மார்ச் 6ல் வெண்ணெய்த்தாழி சேவை

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில்  மாசித் தெப்ப உத்ஸவத்தை முன்னிட்டு மார்ச் 6ல் வெண்ணெய்த்தாழி சேவையில் பெருமாள் எழுந்தருளி தெப்பம் முட்டுத் தள்ளுதல் நடைபெறும்.

இக்கோயிலில் தெப்ப உத்ஸவம் 11 நாட்கள் நடைபெறும்.  பிப்.26 ல் கொடியேற்றத்துடன் உத்ஸவம் துவங்கியது. காலை 7:30 மணிக்கு பெருமாள் திருமண மண்டபம் எழுந்தருளி தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடக்கிறது. நேற்று இரவு ஆண்டாள் சன்னதியில் பெருமாள் எழுந்தருளி மாலை மாற்றுதல் வைபவம் நடந்தது. இன்று மாலை 5:30 மணி அளவில் சுவாமிக்கு சூர்ணாபிேஷகம், இரவில் தங்கப்பல்லக்கில் புறப்பாடும் நடைபெறும். மார்ச் 6 ல் வெண்ணெய்த்தாழி கண்ணன் அலங்காரத்தில் சுவாமி தெப்பக்குளம் புறப்பாடாகி, தொடர்ந்து காலை 10:00 மணி அளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெறும்.  பின்னர் தெப்ப மண்டபத்தில் எழுந்தருளல் நடைபெறும். இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மார்ச் 7 ல் காலை 10:46 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 7:30 மணிக்கு மேல் இரவு தெப்பமும் நடைபெறும். மறுநாள் காலை சக்கரத்தாழ்வாருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும், இரவில் சுவாமி ஆஸ்தானத்திற்கு எழந்தருளலும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !