உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் அப்பர் தெப்பம் கோலாகலம்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் அப்பர் தெப்பம் கோலாகலம்

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் அப்பர் தெப்ப உற்சவம் நேற்று இரவு சிறப்பாக நடந்தது.

சைவ, சமண வழிபாட்டினருக்கிடையே முன்பு கருத்து வேறுபாடுகள் இருந்தது. அப்போது சமணத்தவர்கள் சைவ சமய குரவர்களில் ஒருவரான அப்பர் பெருமானின் பக்தியினை சோதிப்பதற்காக அவரை கல்லில் கட்டி கடலில் வீசினர். அப்பர் பெருமான் சிவபெருமானை வேண்டிப் பாடினார். அப்போது கல், தெப்பமாக மாறி அவர் கடலில் மிதந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் அப்பர் தெப்ப உற்சவ விழா நடத்தப்படுகிறது. அம்மன் சன்னதி பொற்றாமரை குளத்தில் நேற்று இரவு திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பர் பெருமான் பவனி வந்தார் தொடர்ந்து தெப்ப மண்டபத்தில் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும் அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு திருக்காட்சி கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !