உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நடராஜருக்கு நடந்த சிறப்பு அபிஷேகத்தை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஓராண்டில் நடராஜருக்கு, ஆறு நாட்கள் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். இதில், சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம், ஆவணி மாதம், புரட்டாசி மாதம் மற்றும் மாசி மாத பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகமும் மற்றும் ஆனி மாதம் உத்திர நட்சத்திரம், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் ஆகிய நாட்களில்,  ராஜ சபை என்னும், ஆயிரங்கால் மண்டபத்தில், சூரிய உதயத்திற்கு முன், அதிகாலை, 4:00  மணிக்கும் அபிஷேகங்கள் நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று மாலை, மாசி மாத சதுர்த்தசியில் கனகசபையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !