உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சோபுரநாதர் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி : பக்தர்கள் பரவசம்

திருச்சோபுரநாதர் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி : பக்தர்கள் பரவசம்

புதுச்சத்திரம் : திருச்சோபுரம் சத்யாயதாஷி சமேத திருச்சோபுரநாதர் கோவிலில் சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய நிகழ்வு நடந்தது.

கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் சத்யாயதாஷி சமேத திருச்சோபுரநாதர் கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் சுவாமிசிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய நிகழ்வு நடப்பது வழக்கம். இந்த சூரிய அஸ்தமன பூஜையில் பங்கேற்று சுாமி தரிசனம் செய்தால் பல்வேறு தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐய்தீகம். இந்தாண்டு சூரிய அஸ்தமன பூஜை நேற்று நடந்தது. அதையொட்டி மாலை 5.00 மணிக்கு சத்யாயதாஷி சமேத திருச்சோபுரநாதருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு சூரியஒளி சுவாமிசிலை மீதுபடும் அதிய நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !