சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பச்சை பட்டினி விரதம்: பூச்செரிதல் விழா
ADDED :1143 days ago
திருச்சி : சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்செரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது.
உலக நன்மைக்காகவும், பக்தர்களுக்காகவும் ஆண்டுதோறும் பச்சைப்பட்டினி விரதம் இருக்கிறார் சமயபுரம் மாரியம்மன். மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனிச்சிறப்பாகும். இன்று முதல் பச்சை பட்டினி விரதம் துவங்கி உள்ளதை முன்னிட்டு, பூச்செரிதல் விழா நடந்தது. முன்னதாக, பூக்கூடைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.