உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குபேர சாய்பாபா கோவிலில் பாபா அவதார திருநாள் சிறப்பு வழிபாடு

குபேர சாய்பாபா கோவிலில் பாபா அவதார திருநாள் சிறப்பு வழிபாடு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வடிவேல் நகரில் உள்ள சீரடி குபேர சாய்பாபா கோவிலில் அவதார திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

திருக்கோவிலூர், வடிவேல் நகரில், சீரடி குபேர சாய்பாபா கோவிலில் அவதார திருநாளை முன்னிட்டு, நேற்று காலை 9:00 மணிக்கு மஹாயாகம், 11:00 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம், 11:30 மணிக்கு பூர்ணாகுதி, 12:30 மணிக்கு ஆரத்தி பூஜை மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:30 மணிக்கு ஆரத்தி பாடலுடன் பல்லாக்கு சேவையில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி சுப்பு உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !