உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவி கருமாரியம்மன் கோவில் விழா துவக்கம்

தேவி கருமாரியம்மன் கோவில் விழா துவக்கம்

மேட்டுப்பாளையம்: பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில், பூச்சாட்டுடன், 32வது ஆண்டு விழா தொடங்கியது.

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோவில் மற்றும் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள தேவி கருமாரியம்மனுக்கு, 32 வது ஆண்டு விழா, கடந்த 28ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. அன்று மாலை அக்னி கம்பம் நடப்பட்டது. ஏப்., 4ம் தேதி பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பும், 5ல் மாவிளக்கு பூஜையும், 10ம் தேதி சக்தி விநாயகர் பூஜையும், 13 ம் தேதி நடூர் மாரியம்மன் கோவிலில் இருந்து திரிசூலம் மற்றும் சிவபெருமான் படி விளையாடி வருதல் ஆகியவை நடைபெற உள்ளன. 14ம் தேதி தமிழ் புத்தாண்டு விசேஷ பூஜைகள், 15ம் தேதி வெள்ளிங்கிரி மலைக்கு புறப்படுதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தலைமை பூசாரி ஜோதி வேலவன் பூஜைகளை செய்து வருகிறார். விழா ஏற்பாடுகளை வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !