பரமக்குடி சிவன் கோயில்களில் பிரதோஷ விழா: நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் இன்று மாலை 4:00 மணிக்கு பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் நந்திக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சுந்தரேஸ்வரர் சன்னதியில் உள்ள பிரதோஷ நந்த்க்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வலம் வந்தனர். பக்தர்கள் ஹர ஹர, சிவ சிவ, கோஷத்துடன் வழிபட்டனர். எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பரமக்குடி அருகே நயினார் கோவில் நாகநாதர் சுவாமி கோயிலிலும், கீழப்பெருங்கரை அட்டாள சொக்கநாதர் உள்ளிட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.