உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலில் பங்குனி தேரோட்டம்

குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலில் பங்குனி தேரோட்டம்

காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மார்ச் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி வெள்ளிக்கேடகத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, தங்கரதமும், வையாபுரி தெப்பம் மற்றும் வெள்ளி ரதத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடந்தது. நாளை தீர்த்தவாரி உற்சவமும், மயிலாடும்பாறைக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அடிகளார் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !