கிளியூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
ADDED :991 days ago
உளுந்தூர்பேட்டை: கிளியூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரினை இழுத்தனர்.
உளுந்தூர்பேட்டை தாலுகா கிளியூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் மற்றும் தேர் திருவிழா நடக்கிறது. அதனையொட்டி கடந்த 30ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அன்று மதியம் சாகைவார்த்தல் விழாவில் ஏராளமானோர் கூழ் குடங்களை ஏந்தி வந்து சுவாமிக்கு படையலிட்டு வழிப்பட்டனர். அதனை தொடர்ந்து தினசரி இரவு சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடந்தது. நேற்று காலை 11 மணியளவில் தேரோட்டத்தில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு தேர் வீதி உலா நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரினை இழுத்தனர். நேற்று இரவு செடல் உற்சவம் நடந்தது.