உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கோஷம் முழங்க திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் கோலாகலம்

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கோஷம் முழங்க திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் கோலாகலம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஏப். 9) காலை தேரோட்டம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கோஷம் முழங்க விமர்சையாக நடந்தது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 26ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.விழாவில் ஏப்.7ம் தேதி இரவு 7.45 மணியளவில் பட்டாபிஷேகம் நடைபெற்றது. ஏப்.8ல் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் முன்னிலையில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான இன்று தேரோட்டம் இன்று (ஏப். 9) காலை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கோஷம் முழங்க விமர்சையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். ஏப்.10-ம் தேதி தீர்த்தவாரி பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !