உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புளியரை தெட்சிணாமூர்த்தி கோயிலில் 22ல் குருபெயர்ச்சி விழா

புளியரை தெட்சிணாமூர்த்தி கோயிலில் 22ல் குருபெயர்ச்சி விழா

செங்கோட்டை: புளியரை தெட்சிணாமூர்த்தி கோயிலில் வரும் 22ம்தேதி குருபெயர்ச்சி விழா நடக்கிறது. குருபகவான், வரும் 22ம்தேதி இரவு, மீன ராசியில் இருந்து, மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனையொட்டி, செங்கோட்டை அருகேயுள்ள புளியரை சிவகாமியம்பாள் சமேத சதாசிவமூர்த்தி, தெட்சிணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சி விழா வரும் 19ம்தேதி துவங்குகிறது. அன்று காலை 6மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 6மணிக்கு துவங்கும் விழா , 21ம்தேதி வரை நடக்கிறது.


21ம்தேதி மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, காலை 6மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. 22ம்தேதி காலை  வாரம், இன்னிசை, மதியம் 12 ணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 8மணிக்கு ருத்ர ஏகாதசி நடக்கிறது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு குருபெயர்ச்சி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.23ம்தேதி மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலை 5மணிக்கு நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு, வரும் 22ம் தேதி அதிகாலை 5ணி முதல், மதியம் 2மணி வரையிலும், மாலை 5மணி முதல், நள்ளிரவு 1மணி வரையிலும் நடை திறந்திருக்கும். 24ம் தேதி காலை  5மணி முதல், மதியம் 2மணி வரையிலும், காலை 5மணி முதல், இரவு 9மணி வரையிலும் நடை திறந்திருக்கும். ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் ரத்தினவேல் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !