ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா : தங்க கருட சேவை கோலாகலம்
ADDED :1014 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர் திருவிழாவின் நான்காம் நாளில் உற்சவர் நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் புறப்பாடு கண்டுள்ளார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் ஆழ்வான் திருச்சுற்று வழியாக சௌகார் ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார். தொடர்ச்சியாக இன்று 15ம் தேதி காலை சேஷ வாகனம் புறப்பாடு நடைபெற்றது.