சோணைசாமி, கன்னிமார் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
ADDED :903 days ago
அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே குறவன்குளம் சோணைசாமி, கன்னிமார் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் 48ம் நாள் சிறப்பு யாக பூஜைகளை செய்தனர். சுவாமி, அம்மன், பரிவார தெய்வங்கள் பல்வகை அபிஷேக, ஆராதனைகளை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சோணைசாமி பங்காளிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.