உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை குருப்பெயர்ச்சி : குறையனைத்தும் தீர.. கோடி நன்மை சேர இதை படிங்க..!

நாளை குருப்பெயர்ச்சி : குறையனைத்தும் தீர.. கோடி நன்மை சேர இதை படிங்க..!

நவக்கிரகங்களில் பூரணசுப கிரகமான குருபகவான் கும்ப ராசியில் இருந்து நாளை (ஏப்.22, 2023) இரவு 11:27 மணிக்கு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மே1, 2024 வரை இங்கு சஞ்சரிப்பார். திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி, தஞ்சாவூர் தென்குடித்திட்டை, மதுரை குருவித்துறை, சிவகங்கை பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில், திருச்சி உத்தமர் கோவில், சென்னை பாடி வலிதாயநாதர், திருவொற்றியூர், காஞ்சிபுரம்  கோவிந்தவாடி, அகரம் குருகோயில், வேலுார் தக்கோலம், திருச்செந்துார் உள்ளிட்ட தலங்களிலும், சிவன் கோயில்களில் உள்ள தட்சிணாமூர்த்தி, நவக்கிரக சன்னதிகளிலும் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை, சிறப்பு யாகம், அபிேஷகம் நடக்கும். இந்த பெயர்ச்சியால் மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீன ராசியினர் நன்மையடைவர். மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்ப ராசியினர் பரிகாரமாக குருபகவான், தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

குரு ஸ்லோகம்
தேவனாம்ச ரிஷிணாம்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமாமி ப்ருகஸ்பதிம்!!  

தேவர்கள், ஞானிகளுக்கு குருவாகத் திகழ்பவரே! பொன் போல பிரகாசிப்பவரே! ஞானமே வடிவானவரே! மூவுலகங்களுக்கும் தலைவராக விளங்குபவரே! பிரகஸ்பதியே! உம்மை வணங்குகிறோம். இதை தினமும் 12 முறை படியுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !