அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் 5வது நாள் திருக்கல்யாண உற்சவம், நேற்று நடைபெற்றது. காலை 6:00 மணிக்கு மங்கல இசையுடன் விழா துவங்கியது. மாலை 3:00 மணிக்கு ஸ்ரீ விநாயகர், ஆட்சீஸ்வரர், இளங்கிளிஅம்மன், அம்பாள், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடந்தது. தொடர்ந்து, கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளினர். ஆட்சீஸ்வரருக்கும் இளங்கிளி அம்மனுக்கும் தலைமை சிவாச்சாரியார் சங்கர் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பஞ்சமூர்த்திகளும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.