ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் சீதா கல்யாணம் மகோத்சவம்
ADDED :930 days ago
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு ராகவேந்திரர் கோயில் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் சீதா கல்யாண மகோஸ்தவம் நடந்தது. ராமர் சீதா அனுமன் ஆகிய உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. வேதங்கள் முழங்க வைதீக முறைப்படி சீதா ராமர் திருமணத்தை அர்ச்சகர்கள் கோபிநாதன் சுதர்சன் ஆகியோர் நடத்தி வைத்தனர். ராமர் வில் உடைத்து சீதையை கரம் பிடிக்கும் நிகழ்வுகள் திருமணத்தில் நடத்திக் காட்டப்பட்டது. திருமணத்தில் பங்கேற்றவர்கள் பூப்பந்துகளில் ஒருவருக்கொருவர் விளையாடி போல் திருமண நிகழ்வில் பங்கேற்றனர்.